கேரளத்தை புரட்டி போட்ட பேரழிவு.. பிரதமரின் வயநாடு பயணத்திற்கு முன் பினராயி விஜயன் வைத்த கோரிக்கை

Update: 2024-08-09 04:11 GMT

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராகவும், தீவிர பேரிடராகவும் அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவை பார்வையிட வரும் 10-ம் தேதி, பிரதமர் மோடி கேரளா வரவுள்ளார். இதனிடையே, சேதத்தை மதிப்பீடு செய்ய 9 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது. இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார். மக்களின் மறுவாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும், தற்காலிக மறுவாழ்வுக்காக 91 அரசு குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் மீட்பு பணி தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்