11 மணிக்கு அலறிய மக்கள் - வயநாடில் அடுத்த அதிர்ச்சி

Update: 2024-08-09 14:47 GMT

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில், வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். ஆனால் நிலநடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புவியியல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வ மேற்கொண்டுள்ளனர். இது அதிர்வாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்