எங்கும் நேரக்கூடாத கொடுமை... 20கிமீ தாண்டி சிதறி கிடந்த உடல்கள்... கல்நெஞ்சையும் நொறுக்கும் காட்சி

Update: 2024-07-31 13:35 GMT

வயநாட்டிலிருந்து ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட சடலங்கள், மலப்புரத்தில் இரண்டாவது நாளாக மீட்கப்பட்டு வருகின்றன. முண்டக்கை பகுதியில், நிலச்சரிவில் சிக்கி வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சடலங்கள், சாலியாறு வெள்ளத்தில் மிதந்த வண்ணம் உள்ளன. முண்டக்கையிலிருந்து 20 கிலோமீட்டடர் தொலைவிலுள்ள போத்துக்கல்லு பகுதியில் நேற்று 42 சடலங்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், இன்று இதுவரை 21 சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வனப்பகுதியில் சடலங்கள் சிக்கியிருக்கலாம் என்பதால், படகு மூலம் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்