``நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிலா வஜ்ர பூமி?''துளையிட்ட கேரளம்; தமிழகத்திற்கு பேரபாயம்- எச்சரிக்கை மணி

Update: 2024-08-01 11:51 GMT

வயநாடு நிலச்சரிவு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் என்றும்... ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழக மலைப் பகுதிகளிலும் இதேபோல் நிலச் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்...

நிலச்சரிவு வடிவில் வந்த எமனின் பாசக்கயிற்றில் சிக்கி பறிபோயுள்ளன எண்ணற்ற உயிர்கள்... கேரள மாநிலம் வயநாடு எங்கும் அபயக்குரல்... மண்ணுக்கடியில் கதறும் இன்னும் எத்தனை உயிர்களின் குரல்கள் மவுனிக்கப்படுமோ?... நினைக்கையிலேயே நெஞ்சம் பதறுகிறது...

அண்டை மாநிலம் தானே என்று நினைக்க வேண்டாம்... இதே பேரழிவில் இருந்து தமிழ்நாடும் தப்பப் போவதில்லை என அச்சத்தில் உறைய வைக்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்...

முன்னேற்ற பணிகளை ஒருபோதும் குறைகூறுவதற்கில்லை... ஆனால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வளர்ச்சி திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்