கேரளாவில் பறிபோன உயிர் - தொற்றிய அடுத்த பதற்றம் | Kerala | nipah virus

Update: 2024-09-17 07:14 GMT

கேரளாவில் நிபா வைரசால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸ் எங்கிருந்து பரவ துவங்கியது என இதுவரை கண்டறியப்படவில்லை... மலப்புரம் திருவாலி பகுதியில் தற்போது கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸுக்கு பலியானதை தொடர்ந்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன... இந்த வைரஸ் வவ்வால்களிடமிருந்து பரவுகிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கம், மலேசியா, வங்கதேசத்தில் எங்கிருந்து பாதிப்பு துவங்கியது என கண்டறியப்பட்ட நிலையில், கேரளாவில் மட்டும் இதுவரை கண்டறியப்படவில்லை என்ற குறைபாடு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்