உலக புகழ் பெற்ற போட்டி.. தண்ணீரை கிழித்து சீறிய படகுகள்.. புல்லரிக்கும் காட்சி

Update: 2024-09-28 17:24 GMT

உலகப் புகழ்பெற்ற நேரு கோப்பை 70வது படகுப்போட்டி, கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சனிக்கிழமை இந்தப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வயநாடு பேரழிவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (செப்.28) கோலாகலமாக நடைபெற்றது. 19 சுண்டன் படகுகள் உள்பட ஒன்பது பிரிவுகளில் பங்கேற்ற 74 படகுகள், தண்ணீரை கிழித்துக் கொண்டு சீறிப்பாய்ந்த காட்சி மெய்சிலிர்க்கச் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்