தாய் கண்முன்னே துடித்து பிரிந்த 5 வயது குழந்தை உயிர் - கதறிய தாய்.. இதயத்தை துளைக்கும் துயர காட்சி

Update: 2024-09-23 15:00 GMT

கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தின் இலவாலா பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 5 வயது குழந்தை தாய் கண் முன்னேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல பங்க் அருகே பைக்கில் தன் பெற்றோருடன் சென்று கொண்டிருந்த 5 வயது குழந்தை லிகீத், விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது... கோர விபத்தில் உயிரிழந்த மகனைப் பார்த்து தாய் நடு ரோட்டில் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியது. கார் ஓட்டுனர் மீது தான் தவறு என கூறப்படும் நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்