குத்துவிளக்கேற்றி தொடங்கபட்ட மாநாடு - கர்நாடகாவில் தமிழர்களுக்கு சிறப்பான சம்பவம்

Update: 2024-10-20 15:49 GMT

கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மற்றும் கன்னடர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில், இந்த மாநாட்டினை கர்நாடக மாநில முன்னாள் அதிமுக செயலாளர் எஸ் டி குமார் தலைமையேற்று நடத்தினார். இந்த விழாவில் கர்நாடகாவில் உள்ள ஏராளமான தமிழ் அமைப்புகளும் கன்னட அமைப்புகளும் பங்கேற்றன. இந்த மாநாட்டை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேடையில் பேசிய அவர், தனது ஆட்சிக்காலத்தில் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினர். இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர், தனது தொகுதியில் நிறைய தமிழர்கள் உள்ளனர் என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்