ராஜஸ்தானை உலுக்கிய கோர விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

Update: 2024-10-20 12:52 GMT

ராஜஸ்தான் மாநிலத்தில் சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அப்பாவி குழந்தைகள் உட்பட உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்