யோகியை உலுக்கிய சம்பவம்.. கோயிலில் 122 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?

Update: 2024-07-03 03:03 GMT

ஹத்ராஸ் விபத்து மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், மனதை உலுக்கியதாகவும் உத்தர‌ பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி அங்கு முகாமிட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிப்பதை விட அரசியல் ஆக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். இந்த முழு சம்பவமும் விபத்தா?அல்லது ஏதாவது சதி இருக்கிறதா? என்று, ஆக்ரா ஏடிஜிபி தலைமையிலான குழு விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்