வெள்ளத்தில் சிக்கிய தமிழக யாத்திரிகர்கள் - மீட்கப்பட்ட திக் திக் காட்சிகள்

Update: 2024-09-27 11:30 GMT

குஜராத் மாநிலம் நிஷ்கலங்க் மகாதேவின் கோலியாக் கடற்கரையில் அமைந்துள்ள கோயிலைப் பார்வையிடுவதற்காக, தென்னிந்தியாவைச் சேர்ந்த 55 யாத்திரிகர்களுடன் தனியார் பேருந்து சென்றது. இதில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பாவ்நகரில் ஆற்றைக் கடந்தபோது பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் உள்ளூர் நிர்வாகம், 8 வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு கனரக வாகனத்தை அனுப்பியது. சுமார் 5 மணி நேரம், பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர், கிளீனர் சிக்கித்தவித்த நிலையில், பேருந்து பின்பக்கத்தில் உள்ள அவசர ஜன்னல் வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டு, ஏணி வழியாக கனரக வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்