தமிழகத்தில் நடந்த பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - விறுவிறு வாக்குப்பதிவு

Update: 2024-06-30 13:57 GMT

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதரகத்தில் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.பிரான்ஸ நாட்டின் பாராளுமன்ற தேர்தல்இன்றும், ஜூலை 7 ஆம் தேதியும் 2 சுற்றுகளாக நடைபெறுகிறது. பிரான்ஸ் பாராளுமன்றத்தில் உள்ள 577 தொகுதிகளில் ஆசிய நாடுகளுக்கான ஒரு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று இந்தியாவில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்கும் வகையில் புதுச்சேரி, சென்னை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 4 ஆயிரத்து 550 பேர் வாக்களிக்க உள்ள நிலையில் புதுச்சேரி பிரெஞ்சு துணைத்தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்