வாடகை வீட்டில் தனியே இருந்த பெண்..நாலு சுவருக்குள் திரும்பிய இடமெல்லாம் ஓனரின் 'கண்கள்'

Update: 2024-09-25 09:30 GMT

டெல்லியில் தனியாக வாடகைக்கு இருந்த பெண் தங்கியிருந்த வீட்டில், வீட்டின் உரிமையாளர் ரகசிய கேமரா பொருத்தியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளியலறை, படுக்கையறை உள்ளிட்ட மூன்று இடங்களில் பல்புகள், மின்விசிறிகள் போன்றவற்றில் ரகசிய கேமராவை பொருத்திய கரண், அடிக்கடி மின் சாதனங்களை சரி பார்ப்பதாக கூறி வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நடந்த விசாரணையில், ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது..

Tags:    

மேலும் செய்திகள்