ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை - அப்போ தீபாவளி.. அதிர்ச்சியில் மக்கள்

Update: 2024-10-14 11:34 GMT

டெல்லியில் காற்று மாசுவை தடுக்கும் நடவடிக்கைகளை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பட்டாசு உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும் அதனை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை டெலிவரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பட்டாசுகளை வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதி வரை இந்த தடை தொடரும் என்று டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் விரைவில் குளிர்காலம் தொடங்க உள்ளதாலும், குளிர்காலத்தில் இயல்பாகவே காற்று மாசு அதிகம் இருக்கும் என கருதப்படுவதாலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்