கனகதுர்கா கோயிலில் மகளுடன் வழிபாடு செய்த பவன் கல்யாண்

Update: 2024-10-09 13:51 GMT

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலில், துணை முதல்வர் பவன் கல்யாண் வழிபாடு நடத்தினார். இக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெறும் நிலையில், தனது மகளுடன் சென்று பவன் கல்யாண், சுவாமி தரிசனம் செய்தார். நவராத்திரி விழாவின் 7ம் நாளை முன்னிட்டு, கனகதுர்கைக்கு சரஸ்வதி தேவி திருக்கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்