`முறைகேடு ..?' அதானி விவகாரத்தில் திடீர் திருப்பம்...செபி தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு ...

Update: 2024-08-11 06:53 GMT

ஹிண்டன்பர்க் அறிக்கையில் உண்மை இல்லை என்றும் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் செபி தலைவர் மாதபி பூரி புச் தெரிவித்துள்ளார். அனைத்து முதலீடுகளையும் வெளிப்படையாகவே செய்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தங்களுடைய முதலீடுகள் பற்றிய அனைத்து தகவல்களையும் செபிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தான் செபியில் சேர்வதற்கு முன்பாக இருந்த காலம் முதல் தற்போது வரை மேற்கொண்ட முதலீடுகள் குறித்த விவரங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் மாதபி பூரி புச் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்