3 காதலிகளுடன் 15 ஆண்டுகள் "லிவிங் டுகதெர்" - குழந்தைகள் முன்னிலையில் 3 பேரையும் கரம்பிடித்த நபர்

மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து, கடைசியாக 3 காதலிகளையும் ஒரே மேடையில் பழங்குடியின நபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Update: 2022-05-03 09:17 GMT
மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து, கடைசியாக 3 காதலிகளையும் ஒரே மேடையில் பழங்குடியின நபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். அலிராஜ்பூரைச் சேர்ந்தவர் மவுர்யா... இவர் 3 பெண்களைக் காதலித்து அவர்களுடன் 15 ஆண்டுகளாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்தி உள்ளார். இவருக்கு 4 குழந்தைகளும் பிறந்துள்ள நிலையில், தனது பொருளாதார நிலையை மேம்படுத்தி, காதலிகள் 3 பேரையும் தற்போது மவுர்யா திருமணம் செய்துகொண்டுள்ளார். உறவினர்கள் புடைசூழ, பெற்ற குழந்தைகள் முன்னிலையில் மவுர்யாவுக்கு கோலாகலமாக நடைபெற்ற திருமணம், பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்