4 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-17 03:26 GMT
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஏப்ரல் 20ஆம் தேதி மாலை 6 மணி வரை நீடிக்கும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஜுபைர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மேலமுரியில் ஆர்எஸ்எஸ் முன்னாள் பிரமுகர் சீனிவாசன் என்பவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்