ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து -பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் பாராட்டு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-14 03:00 GMT
ஜார்க்கண்ட்  மாநிலத்தில் ரோப்  கார் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் மோடி  பாராட்டு தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுத் மலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ரோப் கார் விபத்தில் பலர் அந்தரத்தில் 
சிக்கி கொண்டனர்.  இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில்  சிக்கி கொண்ட எஞ்சியவர்களை இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டனர். 3 நாட்களாக  
மீட்பு பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம்  உரையாடினார். அப்போது  பாதுகாப்பு படை 
வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி 
அவர்கள் கடினமான மீட்பு  பணிகளில் ஈடுபட்டு பலரது உயிரை காப்பாற்றியதாக குறிப்பிட்டார். 
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொண்ட பிரதமர் மோடி விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய தாம் வேண்டுவதாகவும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்