புதுச்சேரியில் தொடங்குகிறது கடற்கரை திருவிழா - சுற்றுலாத்துறை அமைச்சர்

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்

Update: 2022-04-05 15:53 GMT
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சிறந்த சுற்றுலா நகரமாக புதுச்சேரி மாறி உள்ளதாக தெரிவித்தார். மேலும் சுற்றுலாவினரை ஈர்க்கும் வகையில், வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நான்கு நாட்கள் கடற்கரை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்