புதிதாக 13 மாவட்டங்கள் உதயம் - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று காணொலிக் காட்சி வாயிலாக இன்று 13 மாவட்டங்களை தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-04 17:44 GMT
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று காணொலிக் காட்சி வாயிலாக இன்று 13 மாவட்டங்களை தொடங்கி வைத்தார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். திருப்பதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்தர்களுக்காக கட்டப்பட்ட பத்மாவதி நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று முதல் செயல்பட தொடங்கியது. இதில் மாவட்டத்தின் முதல் ஆட்சியாளராக வெங்கட ரமணா ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பரமேஸ்வர் ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்