வளைவில் வேகமாக திரும்பியதால் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கண்டேர்பல் பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-03-25 12:45 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கண்டேர்பல் பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீநகர்- லே நெடுஞ்சாலையில் ஹரிகனிவான் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வளைவில் வேகமாக திரும்ப முயன்றதால் பேருந்து கவிழ்ந்ததாகவும், காயம் அடைந்த 24 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்