சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரம் - விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளி வைப்பு

சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

Update: 2022-03-16 09:07 GMT
சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தது. சஞ்சய் தத் விடுதலை தொடர்பான ஆவணங்களைத் தனக்கு 
வழங்க மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி பேரறிவாளன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறு பேரறிவாளன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்