புதுச்சேரி கடலில் விடப்பட்ட 'ஆலிவ் ரிட்லி' ஆமை குஞ்சுகள்

புதுச்சேரி கடற்கரையில் 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைக் குஞ்சுகள் சட்டபேரவை தலைவர் முன்னிலையில் கடலில் விடப்பட்டது.

Update: 2022-03-13 14:48 GMT
புதுச்சேரி கடற்கரையில் 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைக் குஞ்சுகள் சட்டபேரவை தலைவர் முன்னிலையில் கடலில் விடப்பட்டது. புதுச்சேரி கிராம கடலோரப் பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் முட்டை இட்டுச் சென்றன. இவற்றை வனத்துறையினர் சேகரித்து பாதுகாத்து வந்த நிலையில், 500க்கும் மேற்பட்ட முட்டைகள் பொரிந்து, அதிலிருந்து ஆமை குஞ்சுகள் வெளி வந்தன. இதனையடுத்து இந்த ஆமை குஞ்சுகள் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலையில் கடலில் விடப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்