இளைஞர் படுகொலையால் பதற்றம் - இரவு நேர ஊரடங்கு அமல்

இந்து இளைஞர் படுகொலையால் கர்நாடகாவின் ஷிவ்மோகாவில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

Update: 2022-02-28 13:12 GMT
இந்து இளைஞர் படுகொலையால் கர்நாடகாவின் ஷிவ்மோகாவில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின் பள்ளி கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இருந்த போதிலும் ஷிவ்மோகாவில் மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு மார்ச் 4 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்