கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் மூழ்கி விபத்து... மணப்பெண் உட்பட 9 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, ஆற்றில் மூழ்கிய விபத்தில் மணப்பெண் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, ஆற்றில் மூழ்கிய விபத்தில் மணப்பெண் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் சௌத் கா பர்வாராவில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி மாவட்டத்திற்கு திருமணத்திற்காக சிலர் காரில் சென்றுள்ளனர். கோட்டா பகுதியில் சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சம்பல் ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் மணப்பெண் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்து தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.