ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய மனு - வீராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய வழக்கில் வீராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கு, நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-11-03 12:05 GMT
மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி, என்பவர்,  தமிழகத்தில் ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, 

விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்து​ள்ளனர். 

பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினர். 

அப்போது Play games தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், dream level விளையாட்டில் கிரிக்கெட்டிற்காக விளம்பரம் கொடுப்பவர்களை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா?, கிரிக்கெட் அணிகளில் மாநில பெயரை பயன்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.  

இது முற்றிலுமாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி, தவறாக வழிகாட்டி, உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

தொடர்ந்து இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்