10ம் தேதி முதல் குருவாயூர் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி - திருமணத்திற்கு முன்பதிவு துவக்க

பிரபலமான குருவாயூர் கோயிலில் வரும் 10ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

Update: 2020-08-31 05:50 GMT
பிரபலமான குருவாயூர் கோயிலில் வரும் 10ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் ஆயிரம் பேர் அனுமதிக்க முடிவு செய்துள்ள கோயில் நிர்வாகக்குழு கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆன்-லைன் முன்பதிவை துவக்க திட்டமிட்டுள்ளது. ஒரே நேரத்தில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். புதிய மேல்சாந்தி தேர்வுக்கான நேர்காணல் 14ம் தேதியும் இதற்கான குலுக்கல் வரும் 15ம் தேதியும்  நடைபெறும் என கோயில் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்