புதுச்சேரி : பூரணாங்குப்பத்தில் கோயில் விழா - முதலமைச்சர் சாமி தரிசனம்

புதுச்சேரி முதலமைச்சரின் சொந்த ஊரான பூரணாங்குப்பத்தில் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2019-07-06 02:03 GMT
புதுச்சேரி முதலமைச்சரின் சொந்த ஊரான பூரணாங்குப்பத்தில் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி  மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதனிடையே, பக்தர்கள் கூட்டத்திற்குள் நுழைந்து ஒரு பெண் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பறிகொடுத்தவர் சத்தம் எழுப்பியதால், அங்கிருந்த மக்களே, செயின் பறித்த பெண்ணை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்