வயநாடு நிலச்சரிவு.. சிரஞ்சீவி, ராம்சரண் சேர்ந்து எடுத்த முடிவு

Update: 2024-08-04 15:59 GMT

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். இந்த இயற்கை பேரழிவால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தானும், ராம் சரணும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார். இதேபோல தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்