சென்னை ராயபுரம் சூரிய நாராயணன் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
இதனால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணான நிலையில், சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். எனவே ஒப்பந்த ஊழியர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட இதனை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.