டென்ஷனாக்கிய அதிகாரிகள்.. கடுங்கோபத்தில் துணை முதல்வர் சொன்ன வார்த்தை

Update: 2024-10-21 05:51 GMT

டென்ஷனாக்கிய அதிகாரிகள்.. கடுங்கோபத்தில் துணை முதல்வர் சொன்ன வார்த்தை

மழை நேரத்தில் தான் களத்தில் இறங்கிய பிறகே அதிகாரிகள் பணி செய்ய தொடங்கியதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் கருப்பூரில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், மழை பெய்த 24 மணி நேரத்தில் மழை பெய்ததற்கான சுவடே இல்லாமல் ஆக்கியது திமுக ஆட்சிதான் என குறிப்பிட்டார். மழை நேரத்தில் தான் களத்தில் இறங்கிய பிறகே அதிகாரிகள் பணி செய்ய தொடங்கியதாகவும் அரசு அதிகாரிகள் அவ்வாறு பழகியதற்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியே காரணம் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். முதல்வரின் உத்தரவின் பேரில், உடனடி நடவடிக்கை மேற்கொண்டதால் மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை தப்பியதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்