தலைமைச் செயலகம் முன்பு திடீர் போராட்டம் - உச்ச கட்ட பரபரப்பில் சென்னை

Update: 2025-03-24 09:45 GMT

சென்னை தலைமைச் செயலகம் முன்பு, 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பெரியமேடு கே.வி.சாலை பகுதியில், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, இந்த போராட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் சூழலில், இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்