பட்டியலை வெளியிட்ட NLC நிறுவனம்..மீண்டும் கிளம்பிய புதிய சர்ச்சை

Update: 2023-08-05 12:55 GMT

என்எல்சி க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பெயர் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்ததால் சர்ச்சை.

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை என்எல்சிக்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இதில் 862 பேர் பேருக்கு பணி வழங்கப்பட்டதாக என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் பல வட இந்தியர்களின் பெயர்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக பரிந்துரையின் பேரில் இவர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் என்எல்சி நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த பரிந்துரை கடிதங்களை கேட்டதற்கு என்எல்சி இடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

இந்த 862 பேரில் ஏராளமானோர் வட இந்தியர்கள் என தெரியவந்துள்ளதால் இவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்