"எத்தனை வருஷம் ஆனாலும் சங்கர் பேசத்தான் போறாரு" - சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

Update: 2024-08-14 01:52 GMT

தேவர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதுதொடர்பான வழக்கில், சவுக்கு சங்கரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார். அப்போது, நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர், தன்னை பார்த்து அரசு அஞ்சுவதால் இரண்டாவது முறை முறையாக குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது என்று கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்