கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 120க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 20 ஆண்டாக நடைபெற்ற திருவிழாவில், முனீஸ்வரர் நகர், சிவக்குமார் நகர், அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.