நின்ற பஸ் மீது மோதிய பைக் - ஸ்பாட்டிலே பறிபோன உயிர் - திருவள்ளூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-09-24 09:46 GMT

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே நண்பனின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் விக்கி, தீபக். இவர்கள் சக நண்பர் ஒருவரது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது, போலாச்சியம்மன்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், விக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தீபக் படுகாயம் அடைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்