திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே திருமணம் தாண்டிய காதலை தொடர மறுத்த பெண்ணை, அரிவாளால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் சித்தையன்கோட்டை அருகே உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகாத நிலையில், அதே மில்லில்
வேலை செய்து வந்த திருமணமான செல்வி என்ற பெண்ணை அவர் காதலித்து வந்தார். இந்நிலையில் காதலை தொடர மறுத்த செல்வியை ராஜமாணிக்கம் அரிவாளால் வெட்டியதால் அவர் படுகாயமடைந்தார்.