காவிரி கரையில் கோரமாக கிடந்த சடலம் - கதிகலங்கிய ஊர் மக்கள்

Update: 2025-03-14 04:23 GMT

பவானி அருகே காவிரியாற்றில் கொலை செய்யப்பட்டு கல்லை கட்டி வீசப்பட்ட ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த நபர் யார்? அவர் எங்கு கொலை செய்யப்பட்டார் ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்