"முதல்வர் அரசியலில் தவறு செய்கிறார்" அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பரபரப்பு பேச்சு

Update: 2024-09-30 14:38 GMT

சூளகிரியில் சீரான மின்சாரம் வழங்காததை கண்டித்து கேபி முனுசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக குறைந்த மின்னழுத்தம் மற்றும் சீரான மின்சாரம் வழங்காததால் விவசாயம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனை கண்டித்து அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்