கர்நாடகாவில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விக்ராந்த் யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புர் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க யானையான விக்ராந்த், விவசாய பயிர்களை சேதப்படுத்தியதோடு, மனிதர்கள் உயிரிழப்பிற்கும் காரணமாக இருந்துள்ளது. இந்நிலையில், அந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து முகாமிற்கு கொண்டு சென்றனர்.