கலைமணி வீடியோ வெளியிட்டு தற்கொலை...சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்

Update: 2024-09-18 05:36 GMT

கட்டுமான ஒப்பந்தப் பணிகளைச் செய்து வந்த ஒப்பந்ததாரர் புதிதாக வீடு கட்டி அமைச்சரை அழைத்துக் கொண்டாடிய நிலையில் அடுத்த நாள் எடுத்த அவர் எடுத்த முடிவு ..ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது...பார்க்கலாம் விரிவாக

வீட்டின் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டு குடும்பத்துடன் புதிய வீட்டில் குடியேறிய ஒப்பந்ததாரர் எடுத்த முடிவால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கி இருக்கிறது...

கடலூர் மாவட்டம் குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி, 15 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் படிப்பை முடித்த கலைமணி கன்ட்ரட்க்‌ஷ்ன் கம்பெனிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்களை எடுத்துக் கொடுக்கும் ஒப்பந்தப் பணிகளைச் செய்து வருகிறார்.

பவானி என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இரு மகன்கள் உள்ளனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சாலை முதல் பல்வேறு கட்டிடங்கள் கட்டுவதற்கான பொருட்கள் முதல் பல்வேறு வகையான பணிகளைச் செய்து கொடுத்து வந்து இருக்கிறார். இது மட்டுமல்லாமல் குமுடிமூலையின் திமுக கிளைக் கழகச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்

அமைச்சரை அழைத்து அமர்க்களப்படுத்திய ஒப்பந்ததாரர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை குமுடிமூலையில் புதிதாகக் கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரடியாகக் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இரு மகன்கள் உள்ள நிலையில் அவர்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் என பவானி கதறி அழுதது உறவினர்களை கலங்கச் செய்தது. மேலும் தனது கணவருக்கு மன உளைச்சலை கொடுத்த இருவரையும் கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் அடுத்த நாள் அவர் எடுத்த முடிவு ஒட்டுமொத்த குடும்பத்தையும் புரட்டிப் போட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்