பஞ்சாப்பில் பார்க்கிங் பிரச்சினையால் விஞ்ஞானி ஒருவரை பக்கத்து வீட்டுக்காரர் தாக்கி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொகாலியில் உள்ள Indian Institute of Science Education and Research மையத்தில் விஞ்ஞானியாக பணி புரிந்து வந்த அபிஷேக் என்பவருக்கு அண்மையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பைக் பார்க்கிங் பிரச்சினையால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் அபிஷேக்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அபிஷேக்கை பக்கத்து வீட்டுக்காரர்கள் தாக்கி தள்ளிவிட்டனர்.