மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-09 11:21 GMT

இந்து சமூகம் பற்றி எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறது...

பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் 616 பேர் கைது.

சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், சாம்சங் தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோரையும் குண்டுக்கட்டாக கைது செய்தது, காவல்துறை..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே

வி.சாலை பகுதியில் அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கிறது..

மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்..

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழையால்

பர்லியாறு பகுதியில் பள்ளிக்கூடத்தை சூழந்த மழைநீரால் தேங்கிய மண் குவியல்..

மண் குவியலை அகற்றும் பணி தீவிரம்..

டெல்லியில் பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்தார் அரியானா முதல்வர் நயாப் சிங் சயானி..

அரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்த நிலையில் சந்தித்து ஆசி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்