யாசின் மாலிக்-ஆல் அதிகாரிகளுக்கு நேர்ந்த நிலைமை

Update: 2023-07-22 16:24 GMT

காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கை உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த விவகாரத்தில், திகார் சிறை அதிகாரிகள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் யாசின் மாலிக், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், யாசின் மாலிக்கை, மற்றொரு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிடாத பட்சத்தில், ஆஜர்படுத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர்.

இதனிடையே பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, மத்திய உள்துறை செயலருக்கு சொலிசிட்டர் துஷார் மேத்தா கடிதம் எழுதியுள்ளார். அதில், அசம்பாவிதம் ஏதேனும் நடந்திருந்தால் உச்சநீதிமன்றத்தின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில், யாசின் மாலிக்கை ஆஜர் படுத்துவதில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக, திகார் சிறை இணை கண்காணிப்பாளர் மற்றும் இரண்டு துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்