திருவண்ணாமலை தீப திருவிழா.. வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உலா

Update: 2022-12-02 05:14 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் திருவிழாவின் ஐந்தாம் நாளில், 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளி ரிஷப வாகனத்தில், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன் பவனி வந்தார்.

தொடர்ந்து விநாயகர்,முருகர்,பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரரும் வெள்ளி ரிஷப வாகனங்களில், மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்