கெட்டுப்போன மயோனைஸ் கொடுத்துட்டு அதை அப்படியே குப்பையில் கொட்டிய ஊழியர்.. கொந்தளித்த கஸ்டமர்.. பிரியாணி கடையில் அதிர்ச்சி

Update: 2023-06-20 06:46 GMT


ஒரகடத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் ஞாயிறு இரவு அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் கிரில் சிக்கன் வாங்கியுள்ளார். அதற்கு கொடுக்கப்படும் மயோனைஸ் குறைவாக இருந்ததால் கூடுதலாக பணம் செலுத்தி தேவையான மயோனைசை வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று சாப்பிடும் போது அந்த மயோனைஸ் துர்நாற்றத்துடனும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் அதை கடைக்கு கொண்டு வந்து மேலாளரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இந்த நிலையில், கடையில் இருந்தது, கெட்டுப்போன மயோனைஸ் தான் என்பதை உணர்ந்த ஊழியர்கள் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்த குப்பை தொட்டியில் அதனை வீசியுள்ளனர். அப்போது அதை கண்டுபிடித்த விக்னேஸ்வரன், அதை எடுத்து வந்து கடையின் வாசலில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்