"மாசக்கணக்குல இந்த பக்கம் வரல சார்" - அரசு பேருந்தை சிறைபிடித்த பள்ளி மாணவர்கள்

Update: 2023-01-09 14:28 GMT

சேத்தியாத்தோப்பு அருகே அரசு பேருந்தை சிறை பிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு - சிதம்பரம் நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த தடம் எண் 43 என்ற பேருந்து கடந்த சில மாதங்களாக இயக்கப்படாமல் இருந்ததாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், வடப்பாக்கம் கிராமத்தில், பள்ளி மாணவர்கள் இணைந்து பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்