"அவனுக்கு மட்டும் அதிகமான சொத்து அப்போ எனக்கு?" மண்ணை போட்டு தன்னை தானே மூடிகொண்ட விவசாயி - தேனியில் பரபரப்பு

Update: 2023-04-21 16:42 GMT

தன்னை விட தம்பிக்கு அதிக சொத்து கொடுத்ததால், விவசாயி ஒருவர் ஜீவ சமாதி அடைவது போல தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் காஜாமைதீன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முகமது சுல்தான் விவசாயமும், இளைய மகன் முகமது சொகையில் பால் பண்ணையும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் காஜாமைதீன் தன்னுடைய மகன்கள் இருவருக்கும் சொத்துகளை பிரித்து கொடுத்துள்ளார். அதில் மூத்த மகனை விட இளைய மகனுக்கு அதிக சொத்துகளை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மூத்த மகன் முகமது சுல்தான் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதோடு கத்தியால் கையை கிழித்து கொண்டு தன்னுடைய நிலத்தில் ஆளுயற குடித்தோண்டி ஜீவ சமாதி அடைவது போல தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையறிந்து விரைந்து வந்த போலீசார் சுமார் மூன்று மணி நேரம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீட்ட நிலையில், மருத்துவமணையில் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்