கார்த்திகை தீபத் திருவிழா மதுபானக் கடைகளுக்கு 6 நாட்கள் தடை - தி.மலை ஆட்சியர் உத்தரவு

Update: 2022-12-02 13:52 GMT

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி வரை மதுபான கடைகள் இயங்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா, கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனிடையே, திருவண்ணாமலை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடிகள் இன்று முதல் 6 நாட்களுக்கு திறக்க மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்